x

மே 24 : முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கேள்வி:

மகரிஷி அவர்களே, முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?

பதில் :

பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.

அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும் வேகம் உண்டு. அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும்.

இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவுக்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுபித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலை முறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“தவறு செய்தால் இன்றோ, நாளையோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம்

விளையும் என்பது தெரிவதில்லை”.

நிறைவால் நிறை:

“நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது

நித்தியமாம் மெய்ப் பொருளால் நிறைந்த உள்ளம்,

ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்

உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி

யார் பெறுவர் யார் தருவர்; அறிவு ஓங்கி

அதுவேதான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றைச்

சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றைச்

செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மே 25 : நிறைவான வாழ்வு

PREV      :  மே 23 : உலக அமைதி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!