x

மே 20 : இறை உணர்வும், அற உணர்வும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இறை உணர்வும், அற உணர்வும் :

“இறைவனானவன் துன்பம் தரலாமா என்று நாம் எண்ணுவோம். ஆனால் உண்மையிலேயே அது துன்பம் அல்ல. நாம் உணர்வதற்காக, உணர்ந்து திருந்துவதற்காக வந்த ஒரு வாகனம் தான் அந்தத் துன்பம் எனப்படுவது. ஒரு தடவை எற்படக்கூடியதை வைத்துக் கொண்டு மீண்டும் அந்தத் துன்பம் வராது காத்துக் கொள்ளக் கூடியது நம்முடைய செயல் தான். ஆகவே செயலிலே விளைவைக் காணும் இந்த ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகு எப்பொழுதும் வைத்துக் கொண்டால் இறைவனே நீதான். மனதிலே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு நிலைக்கிறது. இறைவன் நிலை விட்டு நாம் மாறுவதேயில்லை. ஏனென்றால் எப்பொழுதும் ஏதாவது செயலைச் செய்து கொண்டேதானே இருக்கிறோம்? அந்தச் செயலிலே விளைவு வரும். அந்த விளைவு இறைவனுடைய கருணை, இறைவனுடைய வரம் என்பதிலே ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர்கிறபோது எப்பொழுதும் இறைநிலை உணர்வு மாறாதிருக்கும்.

அதே நேரத்திலே நாம் செய்கிற செயல் மூலமாகப் பிறருக்கு நன்மைதான் வர வேண்டும், தீமை வரக் கூடாது. இந்தச் சமுதாயம் நமக்கு ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொருட்களைக் கொடுத்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் யாருக்கும் நான் செய்வது துன்பமாக இருக்கக் கூடாது. இந்த இரண்டு நோக்கத்தோடு செயலைச் செய்து வந்தால் தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிமையாகச் செய்ய இயலும் என்ற அளவிலே வரும், அப்படி வந்து விட்டதானால் இறை உணர்வும் வந்து விடும், அற உணர்வும் வந்துவிடும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * *

 

 

” (கடவுள்) + (ஆணவம், கன்மம், மாயை) = மனிதன்.

(மனிதன்) – (ஆணவம், கன்மம், மாயை) = கடவுள்”.

“God + Impurities = Man

Man – Impurities = God”

“செயல் புரிபவன் மனிதன், செயல்களின்

விளைவாக வெளிப்படுவது இறைநிலை ஆகும்”

“இறையுணர்வும் அறநெறியும் பேறாய்ப் பெற்ற

எவருக்கும் எண்ணம் சொல் செயல்கள் மூன்றில்

மறை பொருளே பொருத்தமுள விளைவாய்த்தோன்றி

மனதுக்கு இன்பதுன்பம் அமைதி என்னும்

நிறைவு தரும் திருவருளின் நடனம் காண்பார்

நேர் வழியில் செயல் செய்தே விளைவைக் கொள்வார்.


குறையேது எதனை எவரிடம் கேட்டுப் பெறுவதற்குக்

குற்றமற்ற குணக்குன்று அருள்சுரங்கம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மே 21 : நுண்மாண் நுழை புலன்

PREV      :   மே 19 : வாழ்க வையகம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!