x

பிப்ரவரி 19 : ஆன்மநேய ஒருமைப்பாடு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


ஆன்மநேய ஒருமைப்பாடு:

“என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்த போது, என்னை எது எதனோடோ, யார் யாருடனோ ஒப்பிட்டுக் கொண்டேன், அப்போது நான் பெரியவன். நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது.

ஒப்பு உவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்டபோது, எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லையே!
நானே பிரம்மமாக இருக்கிறேன், பிரம்மமே எல்லாமாக இருக்கிறது.

என்னும் போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் நான் உணர்ந்த போது, எதனோடு என்னை ஒப்பிட்டு என்னை எடைபோட்டுக் கொள்வது? நான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் ‘நான் யார்?’ என்ற, நான் பிரம்மம் என்ற தெளிவு தான்.

இந்த இடத்தில் தான் Intutive Love பிறக்கிறது. இந்த இடத்தில் தான் பெரியவர்கள் சொல்லிப்போன ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. இந்த இடத்தில் தான் வந்தவேளை முடிகிறது. இந்த இடத்தில் தான் அறிவுக்கு பூரணத்துவமும் அடக்கமும் அமைதியும் கிடைக்கின்றன.

இந்த இடத்தில் தான் மனதிற்கு முழுமையான தூய்மையும், முழுமையான விசாலமும் கிடைக்கின்றன. இந்த இடத்தில் தான் அன்பும், கருணையும், அருளும் இயல்பாகின்றன. இந்த இடத்தில் தான் அற உணர்வு பிறழாது காக்கும் வல்லமை கிடைக்கிறது. இந்த இடத்திற்கு எல்லோரும் வருவது எளிதே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“வெளிச்சத்திலே இருள் நிறைந்து இருப்பது போல

அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறது”.

“மனம் தன் திறமையையும் வல்லமையையும்

பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே ‘தவம்’ “.

எல்லையில்லா மன நிறைவு :

“இறைநிலையில் தனைஇணைத்துக் கரைந்து நிற்க

எல்லையிலா மனநிறைவு பழகிக் கொண்டால்

குறையுணர்வு எத்துணையும் எழுவதில்லை

குவிந்து மனம்தான் என்ற முனைப்பற்றாலும்

நிறைந்து நின்று கோடான கோடி யண்டம்

நினைவுக்குள்ளே யடக்கி விரிந்து நின்று

மறைந்துதானற்றாலும் முனைப்பங்கு ஏது?

மறையும் அளவில் முழுமைப் பொருளாய் மாறும்.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 20 : தன்னிறைவுக்கான வழி

PREV      :  பிப்ரவரி 18 : உலகையே வசமாக்கலாம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!