x

பிப்ரவரி 15 : வெற்றிபெற வழி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

வெற்றிபெற வழி :

தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். இது தான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம் [Essence] ஆகும். ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படிக் கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா? அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

தனக்கும் துன்பமில்லாது பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெறவேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும். வெற்றியும் வரும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,

பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”.

“கடமையை உணர்ந்திடு. காலத்தில் செய்திடு.

உடம்புக்கும் நல்லது. உள்ளமும் தூய்மையாம்”.

இன்று செய்ய வேண்டியது :

“அன்றிருந்த அறிவின் சூழ்நிலைக்கும்

ஆராய்ச்சித் திறமைக்கும் ஏற்ப வாழ்ந்தார்,

சென்றுவிட்ட நாட்களிலே மனிதர் வாழ்ந்து

சிந்தனையால் அனுபவத்தால் அடைந்த தேற்று,

இன்றிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும்

எதிர்கால விளைவுகளை யுகங்கொண்டும்,

என்றென்றும் மனித இனம் அல்லல் அற்று

இவ்வுலகில் வாழப் பெருமுயற்சி செய்வோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :   பிப்ரவரி 16 : உயர் புகழ்

PREV      :   பிப்ரவரி 14 : ஞானம் – பக்தி – மாயை – முக்தி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!