x

டிசம்பர் 31 : மனிதன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனிதன் :

தெய்வமெனும் மெய்ப்பொருளே ஆற்றலாகி, ஆற்றலின் திணிவு நிலை வேறுபாடுகளால் விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் எனும் ஐம்பூதங்களாகி, பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சமாக விரிந்து, இவ்வைந்தும் பொருத்தமான அளவில் இணைந்து ஒரு சிற்றுருவம் தாங்கி அவற்றின் ஒழுங்கான சுழலோட்டம் ஒன்றோடொன்று ஒத்து, அமைந்து உணர்ச்சி நிலை பெறும் போது உயிராகி, அவ்வுயிரே தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை மூலம் தொடர்பு கொள்ளும் பொருட்களுக்கேற்ப ஊறு, சுவை, மணம், ஒளி, ஒலியென்னும் பஞ்சதன் மாத்திரைகளாகி தனது விரிவான பேரியக்க மண்டல அமைப்பை, உணர்ந்து இரசித்து இன்புற்று, தன் முழுமை நோக்கி விரையும் பயணத்தில் தடைப்படும் நிகழ்ச்சிகளையெல்லாம் துன்பமாகவும், தடையற்ற பயணத்தை இன்பமாகவும் உணர்ந்து, துன்ப இன்ப நிலை காண ஓங்கிய சிறப்பில் வாழ்வின் உண்மையறியும், பேரார்வமாகிய ஆறாம் நிலையறிவைப் பெற்று மனம், உயிர், மெய்ப்பொருள் எனும் மூன்று மறை நிலைகளை உணர்ந்து நிறைவும், முழுமையும் பெறத்தக்க, பெற்று அமைதி பெற்ற ஒரு திருஉருவமே மனிதன்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

அறிவின் முழுமைப்பேறு:

“தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்

தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்

தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று

தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;

தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்

திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட

தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்

திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்.”

மனிதர் அறிவு உயர்ந்து வருகிறது:

“மனிதருக்கு நாளுக்கு நாள் ஆராயும்

மதிநுட்பம் உயர்கிறது இதன் விளைவாய்

மனிதரெலாம் பகையொழித்து பிணக் கொழித்து

மயக்கம் ஒழிந்தே வாழும் வழியைக் காண்பார்

மனிதருக்கு அருள் வாழ்வே இயல் பென்றாலும்

மாசு பல பொருள் துறையில் வளர்ந்ததாகும்

மனிதருக்குப் பொருள் துறையில் சிக்கல் ஆற்றல்


மனம் பண்பாட்டுயர்வாக வாழ்வார் காணீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

PREV      :  டிசம்பர் 30 : பேரறிவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!