x

டிசம்பர் 28 : தன்னிலை அறிந்தவன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தன்னிலை அறிந்தவன்:

ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந் தாலும், அதன் அடுக்கிய வரிசையும், பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே, தாமதமின்றித் தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக் கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும், தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவை யான முறையில் வாழ்க்கையைத் திருப்பி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும்.

புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே, ஒழுக்கமும், சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

அறிவில் முழுமை எய்த:-

“ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்

ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்;

ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்

உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;

ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்

உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்

ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி

உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   டிசம்பர் 29 : ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம்


PREV      :   டிசம்பர் 27 : யோகப் பயிற்சி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!