x

ஜூன் 18 : பண்பாடு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


பண்பாடு :

நான் உலகம் முழுவதும் சென்று பல நாட்டு மக்களைக் கண்டிருக்கிறேன். பல நாட்டுப் பெண்மணிகளை நான் கண்டு அவர்களுடைய பண்பாட்டினுடைய அடிப்படை எல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஏனென்றால் எனக்குப் பண்பாட்டின் மேல் அதிகமாகப் பற்றுதல் உண்டு. பண்பாடு என்றால் என்ன? இந்த உலகம் தோன்றி ஆரம்ப காலத்தில் ஆதி மனிதன் (Primitive man) என்று சொல்வார்களே அந்த நிலையிலேயிருந்து இன்று வரை பார்ப்போம். எத்தனையோ மாறுதல்கள் மனித சமுதாயத்திலே வந்து இருக்கின்றன.

அவையெல்லாம் அந்தந்த இடத்திலே அந்தந்தக் காலத்திலே அங்கங்கு கிடைத்த உணவுப் பொருட்கள், ஆங்காங்கு இருந்த தொழில் வசதி, அதைக் கொண்டு உற்பத்தி சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட நோய் அதைப் போக்கிக் கொண்ட முறைகள் இவையெல்லாம் ஒவ்வொரு நாட்டிலேயும் தாமாகவே பரிணாமத்தில் Cultural evolution-process என்பதாக வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒரு மனிதன் ஒரு இடத்தில் ஒரு குருவினிடத்தில் ஒரு நாட்டில் ஒரு பண்பாடு இருக்கிறது என்றால் அதை நோக்கிப் பார்த்தோமேயானால் நீண்டகாலச் சரித்திரத் தொடராகத்தான் அது இருக்கும். ஆகவே பண்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * *

 

 

“ஒழுக்கமும் அறமும் வேறு வேறாக

உணர்த்தப்படினும் ஒன்றில் மற்றடங்கும்

ஒழுக்கம் அறத்தின் முதல் உறுப்பாகும்”.

“உலகச் சிக்கல்களை ஒரு நொடியில்

உணர்த்திடலாம்; ஒருவராலும் அதனை

உடன் திருத்த முடியாது”

“இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான்

வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாம்

அதைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள்”.

சிறு வயதில் கொண்ட பக்தி:

“கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்

கண்காது மூக்குவைத்துக் கதைகள் சொன்னேன்

கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்

கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்

கடவுளுக்குப் பசிதீர்க்க பால் நெய் தேங்காய்

கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்

கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்


கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   ஜூன் 19 : அறிவறிந்தோர் ஞாபகம்

PREV      :    ஜூன் 17 : சிந்தனை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!