x

ஜனவரி 15 : மனநிறைவு

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

மனநிறைவு:

பேரியக்க மண்டலம் கணக்கிட இயலாத பருமன் உடையது. அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், (சூரியன்கள்) கோள்கள் அதனதன் விரைவிலேபாதையிலேசற்றும்பிறழாமல்உலவிக்கொண்டிருக்கின்றன.மனிதர் வாழும் இப்பூவுலகம் மிகப் பெரியது.

கணக்கிட முடியாத காலத்தையுடையது. மனித இனம், மற்ற உயிரினங்கள் எண்ணிலடங்கா. இவையெல்லாம் இறையென்ற பூரண ஆற்றலின் அழுத்தமென்ற விரைவாலும் ஒழுங்காற்றல் என்ற பிறழா நெறியாலும் பிசகாமல் சத்தியம் தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்பேராற்றலின் கருணையினால் ஒவ்வொவொரு சீவனும் பிறக்கும் போதே அதன் வாழும் காலம் வரைக்கும் தேவையான அனைத்தும் இருப்பாகவும் இணைக்கப்பட்டும் உள்ளன. இவற்றையெல்லாம் நமது மனதை விரித்து எண்ணிப் பார்ப்போம்.

இறை நிலை, பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விளைவுகள், எண்ணம், செயல்கள் விருப்பம் நிறைவு என்ற எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ந்து இணைந்த ஏற்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமக்கென்ன குறை. உண்மையில் குறையே இயற்கையில் எள்ளளவும் இல்லை.

பின் ஏன் மனக்குறை. உடல் நலக் குறை.
மனித உள்ளத்தில் தேவையுணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ண எழுச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது, உடலையும், உயிர் வளர்ச்சியும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம், கற்பனையாகவும் பழக்கத்திலிருந்தும் எழலாம்.

தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நீயே ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப்பங்களை அப்படியே செயல்படுத்த எண்ணத்தை உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தை பயன்படுத்தாத வீணனாகிறாய்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

“தான் உயரவும் பிறரை உயர்த்தவும்

ஏற்ற பயிற்சியும் தொண்டும்

மனவளக்கலையில் அடங்கியுள்ளன”.

தியாகியும் – ஞானியும் :

“கடமையுணர்ந்து அதைச் செயலில்

காட்டுபவன் தியாகியாம்,

கடவுளே மனிதனான

கருத்தறிந்தோன் ஞானியாம்”.

நட்டம் என்பது ஏது?

“வந்ததுதான் போகுமேயல்லாது

வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?


இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்

எவர்க்கும் எப்போதும் நஷ்டமேது?.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 16 : வாழ்த்து 

PREV      :  ஜனவரி 14 : பேரின்ப வெள்ளம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!