x

ஜனவரி 03 : மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி:

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால் நமக்குப் பின்னாலே பிறக்கக்கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்பு (structure) கொண்டதாகத் திகழும். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டும் வாய்ப்பு அளிக்கும். அவற்றின் மதிப்பை உணர்ந்து நீங்கள் முறையாகச் செய்ய வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கிவரும் இறைச்சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும் பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்?. அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களை போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயாராக வைத்துக்கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியான பயிற்சி, உயிர்க்கு உறுதி அளிக்கும் காயகல்பப் பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளதையும், உயிரையும் மேன்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

குண்டலினி யோகம்:

“அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்

அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;

அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்

அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்

அறிவை அயாரா விழிப்பில் பழகிக் கொண்டு

அவ்வப்போ எழும்எண்ணம் ஆய்ந்து தேர்ந்து

அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்

அருள்வழியே குண்டலினி யோகம் ஆகும்.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

NEXT      :  ஜனவரி 04 : தவம்

PREV      :  ஜனவரி 02 : நல்வாழ்விற்கான வழி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!