x

அக்டோபர் 07 : கோள்களும், ஜீவனும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர். 07….
கோள்களும், ஜீவனும் :
ஒவ்வொரு கோளும் பல இரசாயனங்களைக் கொண்டு அவை பரிணாமம் அடைந்ததற்கு தக்கவாறு அலை வீசிக் கொண்டேயிருக்கும். இரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள் மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே, அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும். ஒன்பது கோள்களினுடைய தன்மையையும், தன் அலைகள் மூலம், நமக்கு வந்து கொண்டேயிருக்கும். உலகமும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருப்பதனால் அவ்வப்போது அவற்றின் தூரம் வேறுபடுகிறது. ஒரு சமயம் 10 கோடி மைல் தொலைவிலிருக்கும் ஒரு கோள் இன்னொரு சமயம் 100 கோடி மைல் தொலைவிற்கு சென்று விடும். அவ்வப்பொழுது கிட்டவோ அல்லது தொலைவாகவோ போகப்போக அந்த அலையினுடைய அழுத்தம் வேறுபடும். அதற்குத் தகுந்தவாறு அந்த அலையிலிருந்து வந்து கொண்டிருக்கக்கூடிய, அந்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஜீவனுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், அந்தக் கோள்களின் மாற்றத்தினால் இரசாயன வேறுபாடு உண்டாகும். அதைக் கொண்டு உடலுக்கு நன்மை தீமை, அறிவுக்கு நன்மை தீமை இவைகள் எல்லாம் உண்டாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நிலையாமை நினைவிற்கொள்:-
“பிறப்பு இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
மறப்பு நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.”
“அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்
அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்”.
விதி மதி:-
“இயற்கைச் சக்தியே விதி
இறை யறிந்த அளவே மதி”.
“கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்
தகுந்த அளவாம்; இதிலோர் சக்தி மீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணமாகும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!